கொரோனா தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கியிருந்த மேலும் 283 பேர் இன்று மாலை நாடு திரும்பியுள்ளனர்.
சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் இன்று (ஓகஸ்ட்-12) பி.பகல் 5.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு கட்டுநாயக்கா வந்தடைந்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: சிங்கப்பூர், இலங்கை